×

குடும்ப தகராறில் மனைவியை வெட்டிய கணவர்

சோழிங்கநல்லூர்: வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர் 33வது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் (30). ஆட்டோ ஓட்டுனரான இவரது மனைவி பெயர் மீனா (23). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தீபக் மற்றும் மீனா இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது தீபக் மீனாவை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த மீனா, செங்கல்பட்டில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார்.

நேற்று முன்தினம் இரவு மீண்டும் செங்கல்பட்டில் இருந்து வந்தபோது 5 நாட்களாக எங்கே சென்றிருந்தாய் எனக் கேட்டு மீனாவுடன் தீபக் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாய்த் தகறாறு முற்றிவிட, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மீனாவின் தலையில் தீபக் வெட்டினார். இதில் மீனாவிற்கு தலையில் பழுத்த காயம் ஏற்பட்டது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்சி கிச்சை பெற்று வருகிறார். வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post குடும்ப தகராறில் மனைவியை வெட்டிய கணவர் appeared first on Dinakaran.

Tags : Choshinganallur ,Deepak ,Block ,Sathyamurthy Nagar, Vyasarpadi ,Meena ,
× RELATED புதிய வழித்தடத்திற்கு சாத்தியக்கூறு...